districts

தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தருக! விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

பொன்னமராவதி, ஜூலை 31 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  பொன்னமராவதி 6 வது ஒன்றிய  மாநாடு காரையூரில் ஏ.சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.  மாநாட்டுக் கொடியை சுப்பையா ஏற்றி வைத்தார். புதிய தலைவராக எம். ராமசாமி, செயலாளராக சி.பாண்டி யன், பொருளாளராக எம்.சுப்பையா, துணைத் தலைவர்களாக பி.சித்ரா, என்.பிச்சையம்மாள், துணைச் செயலா ளர்களாக எ.சௌந்தரராஜன், எல்.ஆறு முகம், எ.அழகு, எஸ்.ஆறுமுகம், பி. சுந்தரராஜன், எம்.பழனியம்மாள் ஆகி யோர் அடங்கிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எஸ்.பொன்னுச்சாமி புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து சிறப்புரை யாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செய லாளர் என்.பக்ருதீன், வாலிபர் சங்க  முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கே.குமார், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வி.ஆர்.எம்.சாத்தையா, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.மணிமாறன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.மதியரசி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். நூறு நாள் வேலையில் காலை 7  மணிக்கு என்பதை மாற்றி 9 மணிக்கு  வேலை நேரத்தை துவங்கிட வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரித்து தினக்கூலி 600 வழங்க வேண்டும்.

உடையாம்பட்டியைச் சேர்ந்த சர்வே எண். 245/2 ஆற்று புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, ஒரு மாதத் திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தவறும் பட்சத்தில் சங்கத்தின் தலைமையில் விவசாயிகளை திரட்டி ஆக்கிரமிப்பு நிலத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும். ஒளியமங்கலம்-சுந்தம்பட்டி, ஒலிய மங்கலம்-சேர்வாரன்பட்டி வரை குண்டும்  குழியுமாக உள்ள தார்ச்சாலையை செப்பனிட வேண்டும். காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். திருக்களம்பூர் - வாடத்திப்பட்டி - அரளிப்பாறையில் இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும். ஆறு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட திருக்களம்பர் - கருதங் கோடப்பட்டி வரை உள்ள தார்ச்சாலை தற்போது மிகவும் சேதம் அடைந்து மக்கள் பயன்படுத்த முடியாதபடி உள்ளது. எனவே அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர், புதிதாக சாலை  அமைத்து தர வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.