districts

img

7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் தரவரிசைப் பட்டியலில் புதுகை மாணவர் முதலிடம்

புதுக்கோட்டை, ஜன. 27- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் நீட் நுழைவுத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாணவரை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் அழைத்துப் பாராட்டினார். தமிழக அரசு மருத்துவப் படிப்புக ளுக்கான தரவரிசைப் பட்டியலை திங்கள் கிழமை வெளியிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஐ. சிவா, 514 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதலிடம் பிடித்துள்ளார். இம் மாணவரை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார். மாணவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஐயப்பன்- புனிதா ஆகி யோருக்கும்  மாணவரின் ஆசிரியர்க ளுக்கும் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். மாநில அளவில் முதலிடத்தைப் பெற்ற மாணவர் சிவா, தேசியத் திற னாய்வுத் தேர்வில் மாவட்ட அளவில் முத லிடத்தைப் பெற்றுள்ளார். எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். சிறந்த மாணவருக்கான காமராஜர் விருதைப் பெற்றுள்ளார்.

;