districts

img

‘புதுக்கோட்டை மறவர் செப்பேடு’ நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை ஜன.9- புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக தலைவர் கரு. ராஜேந்திரன் எழுதிய ‘புதுக் கோட்டை மறவர் செப்பேடு’ நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டை யில் நடைபெற்றது. விழாவிற்கு சோழன் சிவப்பிர காசம் தலைமை வகித்தார். இந் திய விவசாய சங்க மாநிலத் தலை வர் ஜி.எஸ்.தனபதி, ஓய்வு பெற்ற அலுவலர் ஏவிசி.ஆர்.கணேசன், விழுப்புரம் மாவட்ட வரலாற்று அறிஞர் வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலினை இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற அலு வலர் பொ.வாசுதேவன், புதுக் கோட்டை அருங்காட்சியக காப்  பாட்சியர் பக்கிரி சாமி ஆகியோர் வெளியிட, குழிபிறை பி.எல்.சுந்த ரம், பழ.சண்முகம், தஞ்சாவூர் துரை.சசிகுமார், வரலாற்று ஆய்வாளர் முனைவர் நந்தர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் ஆ.மணி கண்டன் வரவேற்க, தொல்லியல் ஆய்வு கழக துணை செயலர் பீர்முகமது நன்றி கூறினார்.