புதுக்கோட்டை, ஜூலை 5 - 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன் னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், எழுத்தாளர் கள், கலைஞர்கள், வாசகர் கள், பொதுமக்கள் அனை வரும் வியாழன் (ஜூலை 7) அன்று காலை 11.30 முதல் 12.30 வரை புத்தகம் வாசிக் கின்றனர். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறி வியல் இயக்கமும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை 5 ஆவது புதுக்கோட்டை புத்த கத் திருவிழாவை புதுக் கோட்டை நகர்மன்றத்தில் நடத்துகிறது. புத்தகத் திரு விழாவை மாவட்ட முழு வதும் உள்ள அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனொரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் புத்தகத் திருவிழா குறித்த தகவல் களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து ஊராட்சி மன்றங் களும் தங்களது நிதி நிலை மைக்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி நூலகங்கள் ஏற்ப டுத்த வேண்டும். ஜூலை 7 அன்று அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடைபெ றும் வாசிப்பு இயக்கத்திற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆட்சியர் தொடங்கி வைக்கிறார் ஜூலை 7 அன்று புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் காலை 11.30 முதல் 12.30 வரை மாணவர்கள் அனை வரும் தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை வாசிக்க உள்ளனர். புதுக் கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வாசிப்பு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொ டங்கி வைக்கிறார். மேலும், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள், பொதுமக்கள் அனைவரும் காலை 11.30 இருந்து 12.30 மணிவரை தங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தங்களுக்கு பிடித்த புத்த கத்தை வாசிக்க வேண்டு மென தெரிவிக்கப்பட்டுள்ளது.