districts

img

புதுக்கோட்டை : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அரிமளம், கீரனூர் பேரூராட்சிகளில் வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுத் தாக்கல செய்தனர். அரிமளம் பேரூராட்சியில் 1 ஆவது வார்டு வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பெரி.குமாரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சோலையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீரனூர் பேரூராட்சியில் 6 ஆவது வார்டு வேட்பாளராக கே.மகாலெட்சுமி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், நகரச் செயலாளர் அண்ணாத்துரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.