புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்கள் 5 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.