புதுக்கோட்டை, ஏப்.3- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை யில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதும்ககள் பல்வேறு கோரிக்கை கள் அடங்கிய 352 மனுக்களை பொதுமக் கள் ஆட்சியரிடம் அளித்தனர். அம்மனுக் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், பட்டுப்புழு வளர்ப்பு மேற் கொள்ளும் 7 விவசாயிகளுக்கு தலா ரூ. 37,500 வீதம் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களையும், மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல் பரி சாக ரூ.25,000, இரண்டாம் பரிசாக ரூ. 20,000, மூன்றாவது பரிசாக ரூ.15,000 என மொத்தம் ரூ.3,22,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப் பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரிய சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், பட்டு வளர்ச்சி ஆய்வாளர் வெள்ளையம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.