districts

img

பொன்னமராவதி, திருமயம் ஒன்றியங்கள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திலேயே தொடர கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, செப்.30 - பொன்னமராவதி, திருமயம் ஒன்றியங் கள் புதுக்கோட்டை தொடக்கக் கல்வி மாவட்டத்திலேயே தொடர வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் சார்பில் புதுக்கோட்டையில் வியாழக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி என இரண்டு மாவட்ட தொடக்கக் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்பொழுது வெளி யிடப்பட்டுள்ள அரசாணையில், ஏற்கனவே புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இருந்த பொன்னமராவதி, திருமயம் ஆகிய ஒன்றியங்கள் தற்போது அறந்தாங்கி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் சுமார் நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து கல்வி மாவட்ட அதிகாரிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே இருந்தபடி புதுக் கோட்டை கல்வி மாவட்டத்திலேயே பொன்ன மராவதி, திருமயம் ஒன்றியங்களை இணைக்க வேண்டும். தொடக்கக் கல்வித்  துறையில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக பெண் ஆசிரியர்களே உள்ள நிலை யில், இரண்டு கல்வி மாவட்ட அலுவலகங் களும் போக்குவரத்து வசதியுடன், பாது காப்பாக நகரின் மையப் பகுதியிலேயே அமைய வேண்டும். குலக்கல்வியை புகுத்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைகளை எந்த வடிவத்திலும் மாநில  அரசு அமுல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா ளர் த.ஜீவன்ராஜ் பேசினார். மாநில செயற் குழு உறுப்பினர்கள் ச.வின்செண்ட், பேச்சி யம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பி னர்கள் த.ரமேஷ், பழ.தேவேந்திரன், தோழ மைச் சங்க நிர்வாகிகள் மா.குமரேசன், ஆ.மதலைமுத்து உள்ளிட்டோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் வே.கீதா நன்றி கூறி னார்.

;