புதுக்கோட்டை, மார்ச் 4 - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் கோ.சக்திவேல் (47) சாலை விபத்தில் வியாழக்கிழமை இரவு அகால மரணமடைந்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவரும், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியருமான தோழர் கோ.சக்திவேல் சாலை விபத்தில் வியாழக்கிழமை இரவு அகால மரணமடைந் தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூ ராய்வுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான வீரடிப்பட்டியில் வெள்ளிக்கிழமை உடல் அடக்கம் செய்யப்பட்டது. கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநிலத் தலைவர் ச.மயில், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் பொருளாளர் தி.கண்ணன், மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல், ஜி.பன்னீர்செல்வம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் த. ஜீவன்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தோழர் கோ.சக்திவேலுவுக்கு சகுந்தலா என்ற மனைவி மற்றும் 2 பெண் குழந்தை கள் உள்ளனர். சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் த.ஜீவன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஏராளமானோர் புக ழஞ்சலி செலுத்தினர்.