புதுக்கோட்டை, டிச.5- புதுக்கோட்டை நகராட்சிக் குட்பட்ட உசிலங்குளம் சத்தி யமூர்த்தி நகர், கே.எல்.கே.எஸ் நகர் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உசிலங்குளம் கடை வீதியில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உசி லங்குளம் கிளைச் செயலா ளர் ஏ.டேவிட் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.ஜனார்த்தனன், நகரச் செய லாளர் ஆர்.சோலையப்பன் ஆகியோர் கண்டன உரை யாற்றினார். நகரக்குழு உறுப்பினர்கள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் உசி லங்குளம், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளுக்கு பாது காக்கப்பட்ட குடிநீரை முறை யாக விநியோகம் செய்ய வேண்டும். பாதாள சாக்க டையில் கழிவு நீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உசிலங்குளத் தில் ரேசன் கடைக்கு ஒரு நிரந்தரமான இடத்தை தேர்வு செய்து கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.