districts

மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம்

புதுக்கோட்டை, அக்.3 - காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் ‘மகாத்மா மண்ணில் மக்கள் ஒற்றுமை’ என்ற  தலைப்பில் கருத்தரங் கம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார். கருத் தரங்கில் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், காங்கிரஸ் மாநில செயலாளர் அ. சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர். முன்ன தாக அ.மணவாளன் வர வேற்க, மக்கள் ஒற்றுமை  மேடை ஒருங்கிணைப்பா ளர் எம்.அசோகன் நன்றி  கூறினார். 

;