புதுக்கோட்டை, ஜூலை 7- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் திருமயத் தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வியா ழனன்று தொடங்கி வைத்தார். அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவ தற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்து வதற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மைச் செயலகத்தில், 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டு களுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக வியாழனன்று தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலங்குடி சந்தைபேட்டை தொழில்பழகுநர் பயிற்சி நிலைய கட்டடத்திலும் இக்கல்லூரி கள் தொடங்கப்பட்டன. சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திருமயத்திலும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆலங்குடியிலும் பங்கேற்று பொதுமக்க ளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி (திருவரங் குளம்) மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி) உள் ளிட்டோர் பங்கேற்றனர்.