districts

img

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிகிச்சை பூங்கா திறப்பு

புதுக்கோட்டை, ஜூலை 22 - புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணர்வு கள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்காவை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத் தார்.   புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள, உணர்வுகள் ஒருங்கிணைப்பு  மற்றும் சிகிச்சை பூங்காவில் குழந்தை களுக்கு தொடு உணர்வினை அதிகரிக்க  8 வடிவிலான நடைபாதை, வெவ் வேறு வடிவிலான நடைபாதைகள், மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக ஊஞ்சல், சருக்கு விளையாட்டு, வெவ்வேறு ஒலி  உணர்வை உணரக் கூடிய ஒலி எழுப்பு வதற்கான தகடுகள், நுண்ணறி விற்கான வரைபடம் ஆகியவை அமைக் கப்பட்டுள்ளன.  மேலும் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை வளாகத்தில் உள்ள  கட்டடங்களை இணைக்கும் வகையி லும், குரங்குகள் கட்டடத்திற்குள் உட்புகாத வகையிலும் அமைக்கப் பட்டுள்ள வலையுடன் கூடிய இரும்பு  பாலம் மற்றும் முழு உடல் பரிசோதனை  மையத்தினை திறந்து வைத்து, ரூ.250 மதிப்பீட்டில் ரத்த அணுக்கள், ரத்த  சர்க்கரை, ரத்த உப்பு, கல்லீரல் சம்பந்தப்பட்ட பரிசோதனை, கொழுப்பு  சம்பந்தப்பட்ட பரிசோதனை, சுருள்  படம், கதிர் நெஞ்சுப் படம், ஸ்கேன் பரி சோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்வது குறித்தும் மருத்துவர் களுடன் அமைச்சர் கேட்டறிந்தார்.  அதனைத் தொடர்ந்து அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும்  அவர்களது உறவினர்களின் வசதிக்காக  அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுடுதண்ணீர் வழங்கும்  மையத்தினை திறந்து வைத்தும், அவசர கால 108 வாகனம் எளிதாக  சென்றுவரும் வகையில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள நிழற்குடைகளையும் பயன் பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.  நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு தலைமையில் நடைபெற்றது.     சட்டமன்ற உறுப்பினர் வை.முத்து ராஜா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பூவதி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மருத்துவர் இந்திராணி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.