அறந்தாங்கி, பிப்.2- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கத்தின் ‘‘குளோபல் கிராண்ட்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணை ந்த சுகாதார வளாகம் திறப்பு விழா நடை பெற்றது. அறந்தாங்கி ரோட்டரி கிளப்புடன் இணை ந்து திருச்சிராப்பள்ளி போர்ட் ரோட்டரி கிளப், மலேசியாவில் உள்ள பண்டார் சுங்கை பட்டாணி ரோட்டரி கிளப், ரோட்டரி அறக்கட் டளை நிதியுதவியுடன் வளாகம் கட்டப் பட்டுள்ளது. நிகழ்விற்கு ரோட்டரி தலைவர் மரு.பிரேம்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜ.ஜெரால்டு ரூ.23.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட ஆளு நர்கள் சொக்கலிங்கம், கோபால், முன்னாள் ஆளுநர் கண்ணன், வருங்கால ஆளுநர் ஆனந்தஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திட்டத்திற்கு நன்கொடையளித்த அறந்தாங்கி ரோட்டரி கிளப் சுரேஷ்குமார், விஜயா துரைராஜ், வீரமணிகண்டன், ஆறு முகம், ராமன்பரத்வாஜ், பிரேம்குமார், ஜாஹிர் ஹுசேன், மற்றும் கட்டுமானம் செய்த பொறி யாளர் கர்ணன் ஆகியோர் பாராட்டி கெளர விக்கப்பட்டனர். முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமையாசிரியை கார்த்திகா அனைவரை யும் வரவேற்றார். துணை ஆளுநர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.