districts

அக்.2 சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பொன்னமராவதியில் 3 ஆயிரம் பேரை திரட்ட முடிவு

பொன்னமராவதி, செப்.30 - காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம்  தேதி நடக்க இருக்கும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் குறித்த ஆலோசனை  கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதியில் திமுக தெற்கு ஒன்றியச் செயலா ளர் அ.அடைக்கலமணி தலைமையில் நடை பெற்றது.  இதில் திமுகவின் மாவட்ட பிரதிநிதி  சிக்கந்தர், காங்கிரஸ் வட்டார தலைவர் கிரிதரன், நகர தலைவரும் மாநில பொதுக் குழு உறுப்பினருமான பழனியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய  செயலாளர் பகுருதீன், ஒன்றிய குழு உறுப்பி னர்கள், வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் அழகப்பன், தலைவர் கண்ணன், திராவிடர் கழக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஆசைத்தம்பி, சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் ஏனாதி ராசு, விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் சின்னபழகு உட்பட பலர் பங்கேற்றனர். சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தை பொன்னமராவதியில் ஞாயிற் றுக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி, 6 மணி வரை நடத்துவது. பொன்னமராவதி, காரையூர் உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து 3  ஆயிரம் பேரை பங்கேற்க செய்வது என முடிவு  செய்யப்பட்டது.

;