புதுக்கோட்டை, ஜூலை 3 - பள்ளி மாணவர்களின் வசதிக்காக புதிய பேருந்து வழித்தடத்தை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டையை அடுத்த சொக்கம்பேட்டை, சங்கம்விடுதி, குருவாண் டான்தெரு உள்ளிட்ட கிரா மங்களுக்கு பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வரும் வகையில், பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை யிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்த னர். இதனைத் தொடர்ந்து மேற்படி பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழக நக ரப் பேருந்துகள் புதன்கிழமை காலையிலும், மாலையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்று வரும் வகையில் இயக்கப்பட் டன. புதிய பேருந்து வழித் தடத்தை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அரசு போக்குவரத்துக் கழக கந்தர்வகோட்டை கிளை மேலாளர் தாமோதரன், திமுக ஒன்றியச் செயலாளர் எம்.பரமசிவம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி. ரெத்தினவேல், ஊராட்சி மன்றத் தலைவர் பெரு மாள், துணைத் தலைவர் கே. சாந்தி, அரசுப் போக்கு வரத்துக்கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கே யன், சிபிஎம் கிளைச் செய லாளர் சாமிநாதன், மாதர் சங்க ஒன்றியத் தலைவர் அன்புக்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.