புதுக்கோட்டை, செப்.29:- s ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாடுதழுவிய இயக்கத்தை நடத்த உள்ள தாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி வருமாறு:
கட்டட வரி உயர்வால் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். உள்ளாட்சி அமைப்பு களின் குப்பை வரி, தொழில் வரி போன்ற வரிகளால் விலைவாசி உயர்வும் ஏற்படு வதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்தால், நாடு முழுவதும் 3 கோடி வணிகர் குடும்பங் கள் பாதிக்கப்படும். வணிகர்கள் பாதிக்கப் பட்டால் சாமானிய மக்களும் பாதிக்கப் படுவார்கள். விரைவில் பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களைச் சந்தித்து ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வலியுறுத்த இருக்கிறோம். இதற்காக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம்.
போதைப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் விற்பனையைத் தடுப்ப தில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்கிறோம். தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன என்பதை அரசால் கண்டறிய முடியாதது அல்ல, வரும் இடத்திலேயே இவற்றைத் தடுக்க முடியும்.
வணிகர்களுக்கான சட்டம் வரும்போது, எங்களையும் அழைத்து கலந்து பேசி சட்டங்களை வடிவமைக்க வேண்டும். மின் கட்டண உயர்வால் வணிகர்கள் கடுமை யாக பாதிக்கப்படுகிறார்கள். மாதந்தோறும் மின் கட்டணத்தைக் கணக்கிடும் முறையை விரைவில் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.