புதுக்கோட்டை, ஜன.24 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை அருகே மோகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப் பறை கட்டிடத்தை சட்டப் பேரவை உறுப்பி னர் எம்.சின்னத்துரை திங்கள்கிழமை திறந்து வைத்தார். கந்தர்வகோட்டை ஒன்றியம் மோகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.9.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப் பறை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலு வலர் மஞ்சுளா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் தங்கமணி, பள்ளித்துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய வகுப்பறையை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். கந்தர்வக்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவர் கார்த்திக், வட்டாட்சியர் புவி யரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் காம ராஜ், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலா முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஆசிரியர் அலமேலு வரவேற்க, ஆசிரியர் பாரதி நன்றி கூறினார்.