அறந்தாங்கி, டிச.1- புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு சார்பில் அடிப்படை வசதி கள் செய்து தரக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலா ளர். கரு.இராமநாதன் தலைமை வகித் தார். மணமேல்குடி நகரச் செயலாளர் எஸ் .சேகர், ஆட்டோ சங்க தலைவர் ரகு மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சி. சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் மாதர், வாலிபர் சங்கத்தினர் கலந்துகொண் டனர். ஆர்ப்பாட்டத்தில், மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடு தல் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சுகாதார கேடு உற்பத்தி செய்யும் கழிப்பறை களை சரி செய்து தர வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை மண மேல்குடி ஒன்றியம் வரை விரிவுபடுத்த வேண்டும் என முழக்கமிடப்பட்டன.