அறந்தாங்கி, மார்ச் 23- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியில் புதுக் கோட்டை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தினத்தை யொட்டி ‘‘போதையற்ற தமிழ்நாடு படைப்போம்’’ என்ற முழக்கத்தை முன் வைத்து அனைத்து தரப்பு மக்களிடமும் கையெழுத்து இயக்கம், பேரணி நடை பெற்றது. அறந்தாங்கி செக் போஸ்ட் வளாகத்தில் இருந்து துவங்கிய பேர ணியை வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மகாதீர், குமாரவேல் ஆகியோர் முன்னிலையில், வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர். பா.லெனின் துவக்கிவைத்தார். பேரணி, சின்னகடைவீதி, பெரியகடைவீதி, பழைய மருத்துவமனை சாலை, தாலுகா அலுவலக சாலை வழியாக சென்று பேரா வூரணி சாலை சந்தை பேட்டை அருகே நிறைவு பெற்றது. பேரணியில், அறந் தாங்கி ஒன்றியத் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றி யச் செயலாளர் பாண்டி கெளதம், பொருளாளர் சங்கர் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.