புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் நகரப்பட்டி மற்றும் கொன்னையூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, பொன்னமராவதி ஒன்றிய குழு தலைவர் சுதா அடைக்கலமணி, புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.