districts

img

கறம்பக்குடி நூலக கட்டிடத்திற்கு எம்.சின்னத்துரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை, ஆக.26 -  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வியாழக் கிழமை அடிக்கல் நாட்டி னார்.  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வகோட்டை தொகுதி யில் சட்டப்பேரவை உறுப்பி னராக எம்.சின்னத்துரை  மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு செயல்பட்டு வரு கிறார். இவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கல்வி, சுகாதாரம், நூலகம் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறார்.  அந்த வகையில் கறம்பக் குடியில் அரசு நூலக கட்டிடத் திற்கு ரூ.20 லட்சம் தனது  தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து ஒதுக்கீடு செய்துள் ளார். நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா  வியாழக்கிழமை நடைபெற் றது. சட்டப் பேரவை உறுப்பி னர் எம்.சின்னத்துரை நூலக  கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  இந்நிகழ்வில் கறம்பக் குடி பேரூராட்சி மன்ற தலை வர் முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், ஒன்றிய செயலாளர் பி.வீரமுத்து, பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் தினேஷ்,  தமுஎகச கிளைத் தலைவர்  செல்லி மனோகர் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;