புதுக்கோட்டை, மே 27 - 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக் கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெ றும் என மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவித்தார். 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திரு விழா மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை யில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடை பெற உள்ளது. விழாவை சிறப்பாக நடத்து வது தொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர் கள் நா.முத்துநிலவன், அ.மணவாளன், ஆர். ராஜ்குமார், எம்.வீரமுத்து, எல்.பிரபாகரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து பேசினர். அப்போது, புதுக்கோட்டை புத்தகத் திருவிழவை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து வழக்கம் போல புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். மேலும், 10 நாட்கள் நடைபெ றும் புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க செய்வது மற்றும் புத்தக விற்பனையை அதிகரிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளார்.