புதுக்கோட்டை, ஜன.6- தச்சன்குறிச்சி கிராம மக்களின் தொடர் போராட்டத்தால், ஞாயிறன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே தச்சன்குறிச்சி கிரா மத்தில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளியன்று நடைபெற இருந் தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கோட்டாட்சியர் முருகே சன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடை பெறவுள்ள பகுதியை வியாழனன்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அரசின் அறிவுறுத்தல்படி போதிய பாது காப்பு இல்லாததால் ஜல்லிக்கட்டு போட்டியை தேதி குறிப்பிடாமல் ரத்து செய்து அறிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செங்கிப்பட்டி, கந்தர்வகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவ லறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் வந்திதாபாண்டே தலைமையி லான காவல்துறையினர், மறியலில் ஈடு பட்ட கிராம மக்களை அப்புறப் படுத்தினர்.
நாளை நடைபெறும்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக் கப்பட்டதைக் கண்டித்து வெள்ளி யன்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை, திமுக வடக்கு மாவட்டச் செய லாளர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட் சியர் முருகேசன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சம்பத் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அதில், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத் துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரி டம் பேசிய வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அந்த கிராம மக்கள் கோரிக் கை விடுத்ததன்படி, ஜன.8 அன்று (ஞாயிற்றுக்கிழமை) தச்சன்குறிச்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்து அறி விப்பை வெளியிடப்பட்டது. இதனால், மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் அதற்கான ஆயத்த பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் ஊரான தச்சன்குறிச்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைப்பது என்றும், ஆண்டுதோறும் இந்த விழாவை கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.