districts

img

இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு: 800 காளைகள் பங்கேற்பு - 15 பேர் காயம்

பொன்னமராவதி, மார்ச் 4 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி அருகே இடையாத்தூரில் பொன்மாசி லிங்க அய்யனார் பத்ரகாளியம்மன் கோவில்  மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு  போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார். சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.  இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, மதுரை  உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும்  மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற‌ ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், வீரர்க ளுக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, அண்டா, நாற்காலி உள்ளிட்ட பரிசுகள்  வழங்கப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள்-பார்வையாளர்கள் என 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்ன மராவதி தீயணைப்புத் துறையினர், அன்ன வாசல் மற்றும் காரையூர் போலீசார் செய்திருந் தனர்.