புதுக்கோட்டை, பிப்.10 - தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறதா என்றே தெரியவில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு கலைஞர் தமிழ்ச்சங்கம் நடத்திய விழாவில் உரையாற்றிய தி.க.தலைவர் கி.வீரமணி, முன்னதாக செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “காங்கி ரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி யில் ஒருவர் வெளியே போனாலும், அது பலராலும் பிரம்மாண்டமாகப் பேசப்படு கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் தேசிய ஜன நாயகக் கூட்டணி இருக்கிறதா என்றே தெரிய வில்லை. கூட்டணி கதவுகள் திறந்துள்ளதாக பாஜக சொல்கிறது. பிரதான கட்சியாக இருந்த அதிமுக, கதவுகள் அடைக்கப்பட்டது அடைக்கப்பட்டதுதான் என்கிறது. ஏன் இதைப் பற்றி யாரும் பேசவே இல்லை. தென் மாநிலங்களில் ஒருபோதும் பாஜக வெற்றி பெறப் போவதில்லை.
வட மாநிலத் தேர்தல்களிலும் வெறும் 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். காஷ்மீரில் எப்போது தேர்தல் நடத்தப் போகிறீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது. மக்களும் பாஜக எதிர்ப்பு நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் பாஜகவினர் குறுக்குவழியை தேடுகிறார்கள்.