districts

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தவணை முறையில் வீடு வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துக!

புதுக்கோட்டை, செப்.1- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்  சார்பில் வழங்கப்படும் வீடுகளுக்கான தொகையை தவணை முறையில் செலுத்து வதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச்  செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட் டுள்ள அறிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழகம் முழு வதும் பல்வேறு இடங்களில் குடியிருப்பு கள் கட்டி வீடு இல்லாத ஏழை, எளிய பய னாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அத னொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட் டத்திலும் இத்தகைய குடியிருப்புகள் கட்டி  பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது. மேற்படி வீடுகளுக்கான தொகை ரூ.1  லட்சம் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு  வாரியம் நிர்ணயித்து உள்ளது. தமிழ கத்தில் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கடனு தவி ஏற்பாடு செய்யப்பட்டு மேற்படி தொகை யை செலுத்துவதற்கும், வங்கிக்கான கடனை தவணை முறையில் செலுத்து வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வங்கிக் கடனைக்கூட வட்டியில்லா மல் அசலை மட்டுமே தவணை முறையில் வசூலிக்க வேண்டும் கோரிக்கை எழுந் துள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டையில் ஒதுக்கப்படும் வீடுகளுக்கு ஒரே தவணை யில் ரூபாய் 1 லட்சம் செலுத்த வேண்டு மென அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். மேலும், முதலில் வருபவர்களுக்கு முன்னு ரிமை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பித்துள்ள பலர் வீடு களை பெறமுடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதனால், வசதி படைத்தவர்கள் ஏது மற்றவர்கள் பெயரில் வீட்டைப் பெற்று வாடகைக்கு விடும் நிலை உருவாகி உள்  ளது. எனவே, விண்ணப்பித்துள்ள உண்மை யான பயனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமே தவணை முறையில் தொகையைச் செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அல்லது வங்கிகள் மூலம் கடனுக்கான ஏற்பாடு செய்து மொத்தமாக வாரியத்திற்கு செலுத்திவிட்டு பயனாளிகள் வங்கிகளுக்கு தவணை முறையில் செலுத்துவதற்கு தமிழக அர சும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது தான் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் உண்மையான நோக்கம் நிறை வேறும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.