districts

கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அமைச்சர் ரகுபதி தகவல்

புதுக்கோட்டை,  நவ.5 - கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து,  அசம்பாவிதம் எது வும் நடைபெறாமல் பாது காத்துள்ளது என்றார் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.  புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறு கையில், “ஆறுமுகசாமி ஆணையம் அதன் அறிக் கையை தாக்கல் செய்துள் ளது. அந்த அறிக்கை சட்டப் பேரவையில் வைக்கப் பட்டிருக்கிறது. உரிய துறை கள் மூலமாக யார்யார் மீது அந்த ஆணையம் குற்றம் சுமத்தி இருக்கிறதோ அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விசாரித்து அதன் பிறகு நடவடிக்கை எடுப்போம் என தெளிவுபடுத்தியுள்ளோம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையை சட்டம் பேர வையில் வைத்து அனை வரும் படித்து தெரிந்து கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில்  குற்றம் நடந்த உடனே நட வடிக்கை எடுத்த அரசு,  ஐந்து பேரை கைது செய்துள் ளது. துரித முறையில் செயல்பட்டு வேறு ஏதும்  அசம்பாவிதங்கள் நிகழா மல் தடுத்து அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டுள் ளன” என்றார்.