புதுக்கோட்டை, அக்.15 - தஞ்சாவூர் மாவட்டம் கூனம்பட்டி வழியாகச் செல்லும் ஆச்சம்பட்டி அணைக்கட்டு வழியாக கந்தர்வ கோட்டை தொகுதிக்கு புதிதாக கட்ட ளைக் கால்வாய் நீர்வழிப்பாதை அமைத்துத் தருமாறு தமிழக முதல்வ ருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை கோரிக்கை மனு அளித் துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் மிக முக்கியமான 10 முன்னுரிமை கோரிக் கைகளை தொகுத்து தன்னிடம் வழங்குமாறு அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதனடிப்படையில் கந்தர்வ கோட்டை தொகுதிக்கு உட்பட்ட மக்க ளின் மிக முக்கியமான 10 கோரிக்கை களை தொகுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வழி யாக தமிழக முதல்வருக்கு எம்.சின்ன துரை எம்எல்ஏ., கோரிக்கை மனு அளித் தார்.
அந்த மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகள்
தஞ்சாவூர் மாவட்டம் கூனம்பட்டி வழியாகச் செல்லும் கட்டளைக் கால்வாயிலிருந்து ஆச்சம்பட்டி அணைக்கட்டு வழியாக புதுக் கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மின்னாத்தூர் பெரியகுளத்தை இணைக்கும் வகையில் புதிய நீர் வழிப்பாதை அமைத்துத் தர வேண்டும். இதன் மூலம் குன்றாண்டார்கோவில், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஒன்றியங்களில் சங்கிலித் தொடர் போல நூற்றுக்கும் மேற்பட்ட பாச னக் கண்மாய்களில் தண்ணீரை சேமித்து பாசன வசதி பெற முடியும். எனவே, மேற்படி பகுதிகளில் உள்ள வேளாண் குடிமக்களின் 200 ஆண்டு கால கனவு திட்டத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துக!
கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, கீரனூர் தாலுகா மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், செவிலி யர்கள், ஸ்கேன் சென்டர், டயாலி சிஸ் உபகரணம், பிணவறை, உடல் கூராய்வு அறை உள்ளிட்ட வசதிகளை உருவாக்கி மேம்பட்ட மருத்துவமனை களாகத் தரம் உயர்த்த வேண்டும். கந்தர்வகோட்டை அரசு மருத்துவ மனையில் தாய், சேய் நல மருத்துவ மனை (சீமாங் சென்டர்)-க்கு போதிய கட்டிடம், கருவிகள் உள்ளிட்ட வசதி கள் ஏற்படுத்தித் தர வேண்டும். குன் றாண்டாகோவில் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும்.
துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம்
கந்தர்வகோட்டை பகுதியில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப் பாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். கந்தர்வகோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். கந்தர்வ கோட்டையில் போக்குவரத்து காவல் நிலையமும் அமைத்துத் தர வேண்டும்.
சுற்றுவட்டப் பாதை
கறம்பக்குடி வட்டாரத்தைச் சுற்றி யுள்ள ஏராளமான கிராமங்களுக்கு ஒரே நரகப் பகுதியாக கறம்பக்குடி மட்டுமே உள்ளது. அப்பகுதி மக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை களுக்கு கறம்பக்குடியை நோக்கியே செல்ல வேண்டி உள்ளது. இதனால், கறம்பக்குடி எப்போதுமே போக்கு வரத்து நெருக்கடி மிக்க நகரமாக உள்ளது. விழாக்காலங்கள், பண்டி கைக் காலங்களில் போக்குவரத்து நெருக்கடி மிகவும் அதிக அளவில் உள்ளது. எனவே, கறம்பக்குடி பேரூ ராட்சியை சுற்றி சுற்றி வட்டப் பாதை (ரிங் ரோடு) அமைத்துத் தர வேண்டும். இதேபோல போக்குவரத்து நெருக் கடியை சந்திக்கும் கந்தர்வகோட்டை ஊராட்சியை சுற்றியும் சுற்று வட்டப் பாதை அமைத்துத் தர வேண்டும்.
அரசு கலைக்கல்லூரி
குன்றாண்டார்கோவில் ஒன்றியத் தில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வித் தரத்தை மேம் படுத்தும் வகையில், அரசு கலைக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும். கந்தர்வகோட்டையை மையமாகக் கொண்டு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மாவட்டக் கல்வி அலுவலகம் அமைத்துத் தர வேண்டும்.
போக்குவரத்துப் பணிமனை
கீரனூரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 34 ஆண்டுகளுக்கு முன்பாக பட்டா வழங்கப்பட்டும், இது வரை போக்குவரத்துப் பணிமனை அமைக்கப்படவில்லை. எனவே, விரைவாக போக்குவரத்துப் பணி மனை அமைத்துத் தர வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கந்தர்வ கோட்டை, கறம்பக்குடி, கீரனூரி லிருந்து கிராமப்புறப் பகுதிகளுக்கு புதிய போக்குவரத்து வழித்தடங்கள் அமைத்து புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.
சுற்றுலாத் தலம்
தொல்லியல் அடையாளங்கள் நிறைந்துள்ள நார்த்தாமலை, குன் றாண்டார்கோவில் பகுதிகளில் புதி தாக சுற்றுலாத் தலங்கள் அமைக்க வேண்டும். தொல்லியல் ஆர்வலர்களும், மாணவர்களும், பொதுமக்களும் அப்பகுதிகளுக்கு சென்றுவர வசதி யாக பேருந்துகள் இயக்கப்பட வேண் டும்.
அரசு கிரானைட் தொழிற்சாலை
நார்த்தாமலை, மேலூர், பொம்மா டிமலை, வத்தானாக்குறிச்சி, உப்பிலிக் குடி உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் கனிம வளங்களைப் பயன்படுத்தி அரசு சார்பில் கிரானைட், எம்.சாண்ட், பி.சாண்ட் உற்பத்திக்கான தொழிற் சாலைகளைத் தொடங்கி அரசுக்கு வரு வாயைப் பெருக்குவதோடு, இப்பகுதி இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்பேட்டை
கந்தர்வகோட்டை தொகுதியில் கிடைக்கும் விவசாய விளைபொருட் களைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டப் பட்ட பொருட்களை தயாரிக்கும் அரசு தொழிற்பேட்டை (சிப்காட்) தொழில் பூங்கா அமைத்துத் தர வேண்டும்.
கோட்டாட்சியர் அலுவலகம்
கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, குளத்தூர் வருவாய் வட்டங்களையும், புதுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை பகுதிகளையும் உள்ளடக்கி கந்தர்வகோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு முதல்வருக்கு எம்.சின்னதுரை அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை மனுவை ஆட்சி யரிடம் அளிக்கும் போது, சட்டமன்ற உறுப்பினருடன் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் உள்ளாட் சிப் பிரதிநிதிகள், திமுக, சிபிஎம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.