புதுக்கோட்டை, ஏப்.8- அரசு வேலை வாங்கித் தருவ தாகக் கூறி தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கையெழுத்தை அரசு முத்திரை யுடன் போலியாகப் போட்டு ரூ.80 லட்சம் அளவுக்கு மோசடி செய்த வரை கைது செய்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் அனகாபுதூர், திம்ம சமுத்திரம் திவ்யா நகரைச் சேர்ந்த ஆரோன் மகன் பிரான்சிஸ் ஜெரால்டு என்கிற சசிகுமார் (35). இவர் தமிழ்நாடு முழுவதும் போலி பணி ஆணைகளை வழங்கி பண வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக் கோட்டை, கந்தர்வகோட்டை, திரு வரங்குளம், கறம்பக்குடி ஆகிய வட்டாரப் பகுதிகளில் படித்து வேலைக்காக காத்திருக்கும் வறு மையில் வாடும் குடும்ப இளைஞர் கள், இளம் பெண்களிடமும் இத்த கைய மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. தனக்கு தலைமைச் செயலா ளரை தெரியும். தன்னை நம்பி பணம் கொடுத்தால் வேலை ஆர்டர் வாங்கித் தருவதாகக் கூறி சில காகிதங்களைக் காட்டி அவர்களை நம்ப வைத்துள்ளார். பிறகு அவர்க ளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், உமா மகேஸ்வரி ஐஏஎஸ், மகிழ்மதி ஐஏஎஸ், ஜெயந்தி ஐஏஎஸ், அகிலாண்டேஸ்வரி ஐஏஎஸ் எனப் பலரது கையெழுத்து களுடன் தமிழ்நாடு அரசு முத்திரை யைப் பயன்படுத்தி போலி பணி ஆணைகளை வழங்கியுள்ளார்.
சுமார் ரூ.80 லட்சம் அளவுக்கு அவர் வசூலித்து இருப்பது தெரிய வருகிறது. இது மோசடியான, போலியான பணி ஆணை எனத் தெரியவந்ததும் கொடுத்த பணத்தை கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் ஜெரால்டு என்ற சசிக்குமாரிடம் கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு திமிராகவும் அலட்சியமாகவும் ஜெரால்டு பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவல கம் வந்து தங்களைக் காப்பாற்று மாறு முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு முத்திரை மற்றும் தலைமைச் செயலாளர், ஐஏஎஸ் அதிகாரி களின் கையெழுத்துகள் போலி யாகப் பயன்படுத்தி கிராமங்களில் படித்த இளைஞர்கள், இளம் பெண் களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த நபர் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட மக்க ளுடன் புகார் தெரிவித்தோம். இந்நிலையில், மோசடிப் பேர்வழி ஜெரால்டு ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை கிரா மத்தில் இருந்து கொண்டு பணத் தைப் பெற்றுக்கொள்ளுமாறு வெள்ளிக்கிழமை அலைபேசியில் அழைத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் ஜெகன், கமல் உள்ளிட்ட 4 பேர் அங்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த ஜெரால்டு தன்னைக் கொல்ல வருவதாக நாடகமாடி ஆலங்குடி போலீசாருக்கு மற்ற வர்களை வைத்து தகவல் தெரிவித் துள்ளார். இதனையடுத்து ஆலங் குடி காவல்துறையினர் பாதிக்கப் பட்ட நபர்களையே கைது செய்து இரவு முழுவதும் தங்க வைத்துள்ள னர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை வன்மையாக கண்டிக் கத்தக்கது. உயர் அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் அரசு முத்தி ரைகளை மோசடியாக பயன் படுத்தி வேலை வாங்கித் தருவ தாக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நபரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் இழந்துள்ள பணத்தை மீட்டுத்தர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இது போன்ற மோசடிப் பேர்வழி களின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எஸ்.கவிவர்மன் தெரிவித்துள்ளார்.