districts

img

திருநங்கைகளுக்கு மின் அடையாள அட்டை வழங்கல்

புதுக்கோட்டை, மே 9 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை யின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 52  திருநங்கைகளுக்கு மின் அடையாள அட்டை யினை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வழங்கினார்.  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், தமிழ்நாடு திருநங்கைகள் நல  வாரியம் 2008 ஆம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது. இதன் மூலமாக திருநங்கை களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு சட்டம் 2019 மற்றும் விதிகள்  2020-ன்படி, திருநங்கைகள் இணைய வழி மூலமாக அடையாள அட்டை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், திருநங்கைகள் என்ற கைபேசி செயலியும் உருவாக்கப்பட்டு, அவர்களது சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 86 திருநங்கைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 72 பேருக்கு இணைய வழி அல்லாத சாதாரண அடையாள அட்டை கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டது.  தற்போது அவர்களுக்கான சேவை களை எளிதாக பெறுவதற்காக திருநங்கை களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ள இணையதளம் மூலம் மின் அடை யாள அட்டை முதற்கட்டமாக 52 திருநங்கை களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, திரு நங்கைகள் அனைவரும் மின்-அடையாள அட்டையினை உரிய முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.