districts

img

பதவி உயர்வு வழங்கக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 30-  அடிப்படை பணியா ளர்கள், இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பதவி உயர்வை உடனே வழங்கிட வேண்டும். மாவட்ட வருவாய் அழகில் உள்ள கூர்மை பணியிடங்களில் அரசால் குறிப்பிட்டுள்ள கால அளவிற்கு மேல் பணி புரியும் அலுவலர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும். 04-04-2012 தொடர்பான மேல்முறையீடு மனு மீது சீனி யாரிட்டி நிர்ணயம் செய்து இட ஒதுக்கீடு படி திருத்திய துணை வட்டாட்சியர் பட்டி யலை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வரு வாய்த்துறை அலுவலர்கள் சார்பில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க த்தின் மாவட்டத் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். செயலாளர் வைரவன், பொருளாளர் தமிழ்மணி மற்றும் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் பங்கேற்ற னர்.