புதுக்கோட்டை, ஜூன் 5 - புதுக்கோட்டை நகரிலுள்ள வேகத் தடை களை சீரமைக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு, துணைக் காவல் கண்காணிப் பாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து துணைக் காவல் கண்கா ணிப்பாளர் ராகவி, நகராட்சி ஆணையர் சி.ந. சியாமளாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரி வித்திருப்பதாவது:
புதுக்கோட்டை நகரில் முன்னறி விப்பின்றியும், அதிக உயரத்துடனும், அடை யாளம் காட்டும் வகையில் வெள்ளைக் கோடு கள் போடாமலும் வேகத்தடைகள் அமைக் கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி பேருந்து நிலை யத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் வழியில் உள்ள வேகத்தடையில் விபத்துக்குள்ளாகி வெங்கடேஸ்வரன் (26) என்பவரும், ஏப்ரல் 7-ஆம் தேதி பழைய அரசு மருத்துவமனை அருகில் உள்ள வேகத்த டையில் விபத்துக்குள்ளாகி காவல் ஆய்வா ளர் பிரியா (45) என்பவரும் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அதிக உயரத்துடன், வெள்ளைக் கோடு போடாமல் வேகத்தடை அமைத்த நகராட்சி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அதைக் கண்காணிக்கத் தவறிய அலுவ லர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகர் முழுவதும் உள்ள வேகத் தடைகளை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.