அறந்தாங்கி, ஏப்.23 - புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் எதிரொலி யால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் வரத்து குறைந் துள்ளது. இதனால் மீன்க ளின் விலை உயர்ந்துள்ளது. 700 கிராம் எடை கொண்ட ஒரு சிலுவை கெண்டை மீன் 150 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கூறு கொடுவா மீன் ரூ.250 லிருந்து, ரூ.450-க்கும், புள்ள முரல் ஒரு மீன் ரூ.15 லிருந்து ரூ.25-க்கும், வெங்கனா பொடி மீன் ஒரு கூறு ரூ.100 லிருந்து ரூ.200 ரூபாய்க்கும், இறால் ஒரு கிலோ ரூ.400 லிருந்து, ரூ.600-க்கும் விற்பனையாகிறது. இதேபோல மற்ற வகை மீன்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளன. கடல் மீன்க ளின் வரத்து குறைந்துள்ள தால் குளத்து மீன்களும், வளர்ப்பு இறால்களும் விற்ப னைக்கு வருகின்றன.