புதுக்கோட்டை, செப்.28 - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்படுவதாக மாண வர்களும், அவர்களின் பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து, சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத் தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலி யுறுத்தி கல்லூரி முன்பு வகுப்புகளைப் புறக் கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் அ.பாலாஜி, ச.பிரியங்கா, மாவட்டக்குழு உறுப்பினர் அன்பரசன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் கறம்பக்குடி துணை வட்டாட்சி யர், கறம்பக்குடி காவல் ஆய்வாளர் ஆகி யோர் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க 15 நாட்கள் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.