அறந்தாங்கி, அக்.13- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் எம்எஸ்.கலந்தர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன், சிபிஎம் தாலுகா செய லாளர் நெருப்பு முருகேஷ், சிஐடியு கூத்தபெருமாள், வே.வீரையா, ஆகியோர் பேசினர். விவசாய, மாதர் சங்க நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், 2021-2022 ஆம் ஆண்டில் பருவம் தவறி பெய்த பெரும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் உரிய இழப்பீட்டை உடனே வழங்கிட கோரியும். விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.