திருவாரூர், ஏப்.28- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழ னன்று விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் வி.எஸ்.கலியபெருமாள், எஸ்.தங்கசாமி, தியாகு.ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், மாவட்டம் முழுவதி லும் தூர்வாரும் பணிகளை உடனடியாகவும் முறைகேடில்லா மலும் நடத்த வேண்டும். கற்கத்தி-முதல் வேலங்குடி வரை நட்டாற்றில் அமைந்துள்ள பாசன தலைப்பு வாய்க்கால் மதகுகளை எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் சீர் செய்து தர வேண்டும். கோயில் நிலங்களுக்கான 20 ஆண்டுகளுக்கு முந்தைய குத்தகை பாக்கி நடப்பாண்டுக்கான மதிப்பில் கணக்கிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். பருத்தியை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கட்டுபடியான விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும். உரத்தட்டுப் பாட்டை களைய வேண்டும். நெடுங்குளம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மழை நீர் தேங்காமல் மேடாக்க ஒப்பந்தப் புள்ளி கோர வேண்டும். புதூர் கிராமத்தில் தனியார் இடத்தில் வாடகைக்கு இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தை தஞ்சை கூட்டுறவு விற்பனை நிலையத்துக்கு சொந்தமான இடத்தில் நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.