புதுக்கோட்டை, ஜன.17- குடிநீரில் மனிதக் கழிவைக் கலந்து புகாருக்குள்ளான வேங்கைவயல் குடி யிருப்பை உள்ளடக்கிய இறையூர் கிரா மத்திலுள்ள அய்யனார் கோவிலில் 3 அமைச்சர்கள் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. மாநில ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி சேகர், ஆதி திராவிடர் நலத் துறை இயக்குநர் த. ஆனந்த் ஆகியோருடன் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாநில சுற் றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொ) சியாமளா தேவி, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை ஆகியோரும் கலந்து கொண்ட னர். அய்யனார்கோவிலில் பொங்கல் வைக் கப்பட்டு அனைத்து சமூக மக்களுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அய்யனார் கோவிலில் சிறப்பு பொது வழிபாடு நடத் தப்பட்டது. வேங்கைவயல் பட்டியலின குடி யிருப்புப் பகுதிக்குச் சென்ற அமைச் சர்கள், சட்டமன்ற உறுப்பினர், அதிகாரி கள் அங்கு நடைபெற்று வந்த புதிய குடி நீர்த் தொட்டி கட்டுமானப் பணிகள் மற்றும் மருத்துவ முகாமை பார்வையிட்டனர். முன்னதாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களிடம் கூறுகை யில், “சமத்துவம், சமஉரிமை இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல், பொது வழிபாடு நடத்தப்பட்டது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 85 சாட்சி களிடம் விசாரணை நடத்தினர். போதிய முன்னேற்றம் இல்லாததால், இச்சம்பவத் தில் விசாரணை துரிதமாக நடக்க வேண் டும் என்பதற்காக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது” என்றார்.