districts

img

ஆங்கிலேயர்-தொண்டைமான் மன்னர் எல்லை கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை,  ஜூன் 24 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் நகரப்பட்டி உடைகுளம் வயலில் ஆங்கிலேயர் தொண்டைமான் மன்னரிடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு செவலூர் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் க.சர வணன் அளித்த தகவலின்பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணி கண்டன், தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் மேற் கொண்ட கள ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  இக்கல்வெட்டு குறித்து ஆ.மணி கண்டன் கூறியதாவது:  புதுக்கோட்டை தொண்டை மான்கள் மற்றும் ஆங்கிலேயரி டையே இணக்கமான உறவு இருந்துள்ளதை தொடர்ந்து, இந்திய  ஆட்சிப் பிரதேசத்தில் தனித்துவ மிக்க நிர்வாக சுதந்திரத்துடன் புதுக் கோட்டை சமஸ்தானம் செயற்பட  ஆங்கிலேய அரசு அனுமதித்திருந் தது. தொண்டைமான் ஆட்சிப்பகுதி எல்லை உள்ளிட்டவற்றை தெளி வாக வகுத்ததன் மூலம் எவ்வித முரண் பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் இரு தரப்பு அரசுகளும் செயலாற்றி யதை தற்போது புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள நகரப்பட்டி எல்லைக் கல்வெட்டு வெளிப்படுத்து கிறது.  இக்கல்வெட்டில் பொறிக்கப்பட் டுள்ள செய்தி குறிப்பின்படி 1822 ஆம்  ஆண்டு மதுரை கலெக்டர் மேஸ்தர் சுபிதார் என்பவாின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டம் மருங்காபுாி தாலு காவைச் சேர்ந்த கலிங்கப்பட்டி கிரா மத்திற்கும் புதுக்கோட்டை தொண் டைமானார் ஆட்சி பகுதியில் உள்ள  கல்லம்பட்டி கிராமத்திற்கும் எல்லை நிர்ணயம் செய்து எல்லைக் கல் நடப் பட்ட செய்திக் குறிப்பை இக் கல்வெட்டு தொிவிக்கிறது. புதுக்கோட்டை தொண்டைமான்  மன்னர்களுக்கும் ஆங்கிலேயர் களுக்கும் இணக்கமான சூழல் இருந் ததையும், ராஜா விஜய இரகுநாத ராய தொண்டைமான் (1807-1825)  ஆட்சி காலத்தின் போது இக்கல்வெட்டு  நடப்பட்டுள்ளது என்பதையும் வெளிப் படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கள ஆய்வின் போது  கரகமாடி ப.சரவணன், சுப்பிரமணி யன், கா.சக்திவேல் ஆகியோர் உடனி ருந்தனர்.