districts

உள்ளூர் விற்பனையை நிறுத்தியதால் பால் கொள்முதல் நிலையம் முற்றுகை

புதுக்கோட்டை,  டிச.10 - கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பால் கூட்டு றவு சங்கங்கள் மூலம் ஆவின் கொள்முதல் செய் யும் போது உள்ளூரில் சில்லரை விற்பனை செய்ய  அரசு தடை விதித்திருப் பதை கண்டித்து பால் உற்பத் தியாளர்கள் கூட்டுறவு  சங்கம் முற்றுகையிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடந்த 48 ஆண்டுகளாக பால்  உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கம் கீரமங்கலத்தை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளிடம் கொள் முதல் செய்யும் பால் உள்ளூ ரில் வீடுகள், கடைகளுக்கு விற்பனை செய்கின்றன. இதில் மீதமுள்ள பாலை  ஆவினுக்கு அனுப்புகின்ற னர்.  கீரமங்கத்தில் தற்போது சராசரியாக ஒரு நாளை 2  ஆயிரம் லிட்டர் வரை கூட்டு றவு சங்கத்தில் பால்  கொள்முதல் செய்யப்படு கிறது. இதில் 70 சதவீதம் வரை உள்ளூரில் விற்பனை யாகிறது. ஆனால் கடந்த  டிசம்பர் முதல் தேதியி லிருந்து கூட்டுறவு சங்கங்க ளில் கொள்முதல் செய்யப்படும் பாலில் 10  விழுக்காடு மட்டுமே உள்ளூ ரில் விற்பனை செய்ய வேண்டும். மீதமுள்ள 90  விழுக்காடு பாலை ஆவி னுக்கு அனுப்ப வேண்டும். மீறினால் கூட்டுறவு சங்க செயலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்ற றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கங் களும் உள்ளூர் பால் விற்ப னையை நிறுத்தின. இதனால் பொதுமக்கள் பெரி தும் அவதிப்பட்டனர். அதே போல கீரமங்கலம் பால்  உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கத்தில் உள்ளூர் விற் பனையை நிறுத்தியதால், பால் வாங்க காத்திருந்த பொதுமக்கள், தேநீர் கடை காரர்கள், பால் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழமை திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப் பான சூழல் ஏற்பட்ட நிலை யில், புதுக்கோட்டை ஆவின் எஸ்.ஒ திருப்பதி, மற்றும் கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.  அப்போது வீடுகளுக்கு பால் விற்பனை செய்ய லாம் என்றனர். ஆனால் கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. ஆவினில் மாதாந்திர அட்டை போட்டு பாக்கெட் பால் வாங்கிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரி வித்தனர். ஆனால் எங்கள் ஊரில்  பாக்கெட் பாலை டீக்கடை யில் பயன்படுத்த முடியாது,  எங்கள் ஊரில் உற்பத்தியா கும் பால் எங்களுக்கு வேண்டும் என்று அதி காரியை முற்றுகையிட்டனர். இதற்கு அதிகாரிகள் ஒப்பு தல் தெரிவித்த பிறகு சில்லரை விற்பனை செய்யப் பட்டது.  உள்ளூரில் விற்பனை செய்வதை நிறுத்தினால் மீண்டும் போராட்டம் நடத்து வோம் என பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்ற னர்.