districts

img

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடுக! ஆவுடையார்கோவிலில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, ஜூன் 19- 2023-2024 ஆம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கும்  100 சதவீத இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யை அடுத்த ஆவுடையார்கோவிலில்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவேரி, வைகை. குண்டாறு இணைப்பு திட்டத்தில் ஒரு பகுதியான காவிரி தெற்கு- வெள்ளாற்று இணைப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். என்றும் , நீண்ட நாட்களாக செப்பனிடப்படாமல் உள்ள குளத்துக்குகுடியிருப்பு- பெருநாவலூர் சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பி னர் எஸ். கலந்தர்  தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன், விவசாயத்தொழிலாளர் சங்கத்ன் வீரையா, கூத்தபெருமாள் ஆகியோர் பேசினர்.