districts

img

மருத்துவர் தெட்சிணாமூர்த்தி எழுதிய நூல்கள் அறிமுக விழா

அறந்தாங்கி, ஆக.31 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி நூல்கள் அறிமுக விழா நடைபெற்றது. இந்திய மருத்துவர் சங்க செயலாளர் மரு.இப்ராம்ஷா தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், தமிழ் மாநில காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் கராத்தே.கண்ணையன், ஆவுடையார்கோயில் துணை வட்டாட்சியர் ஜபருல்லா, தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்புச் செயலாளர் நீலகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாதார கல்வி விழிப்புணர்வு இயக்க மாவட்ட துணை அமைப்பாளர் தொல்காப்பியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ‘அரசியலும் ஆக்ஸிஜன்தான் - தொகுதி 1’ நூலை புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞர் வெங்கடேசன் அறிமுகம் செய்ய, அந்த நூலை ஜெயகுமார், மரு.விஜய் சிவானந்தம், சீனிவாசன், முனைவர் முபாரக்அலி, அண்ணாத்துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ‘கரோனா காலச்சுவடு - தொகுதி 1’ நூலை மரு.அஷாருதீன் அறிமுகம் செய்ய, மரு.இப்ராம்ஷா,  அனு, கவிஞர் கீதாஞ்சலிமஞ்சன், சீதாவிஸ்வம், மூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ‘ளமை கூட்டும் அழகுக்கலை, மருத்துவ நவீன சிகிச்சைகள்’ நூலை மூத்த தோல் நோய் மருத்துவர் கிருஷ்ணராஜ் அறிமுகம் செய்ய, கராத்தே. கண்ணையன், திசைகள் அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக், ராவுத்தர்கனி, ஜெயலெட்சுமி, தாஜுதீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கவிஞர் ஜீ.வி. சிறப்புரையாற்றினார். மரு.தெட்சிணாமூர்த்தி ஏற்புரையாற்றினார்.