புதுக்கோட்டை, ஜூலை 8 - நிதி பற்றாக்குறை என்ற பெயரில் போக்குவரத்துத் தொழிலாளர்களை தமிழக அரசு வஞ்சிக்கக் கூடாது என வலியுறுத்தி அரசு போக்கு வரத்து ஊழியர் (சிஐடியு) சங்கத்தினர் வெள்ளிக் கிழமை புதுக்கோட்டையில் வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் நகரக் கிளைத் தலைவர் டி.சந்தா னம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மத்திய சங்க துணைச் செய லாளர்கள் எஸ்.செந்தில் குமார், வி.ஆனந்தன், கிளைச் செயலாளர் எம்.அண்ணாதுரை ஆகியோர் பேசினர். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா, பொரு ளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன் மற்றும் தோழ மைச் சங்க நிர்வாகிகள் பேசி னர். தமிழக அரசு போக்கு வரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக் கையை தடுத்து நிறுத்த வேண்டும். ஊதிய ஒப்பந் தத்தை இறுதிபடுத்த வேண்டும். பேட்டா, இன் சென்டிவ் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஓய்வுகாலப் பயன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். திமுக அரசு தனது தேர்தல் கால வாக்குறு திகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.