districts

img

அறந்தாங்கியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்.பி., பிரச்சாரம்

அறந்தாங்கி, பிப்.17- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர்மன்ற தேர்தலில் 27 வார்டுகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது:  ‘‘அரசு எந்த திட்டம் போட்டாலும் மக்க ளுக்கு போய் சேரவேண்டும். மக்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் கவுன்சிலர் கள். எனவே, குடிநீர், தெருவிளக்கு, சாலை,  குப்பைகள் இதை எல்லாம் சரி செய்ய கவுன் சிலர்களிடம் மக்கள் தெரியப்படுத்துவர். கவுன்சிலர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற வேண்டும். தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள கட்சிகளில் எனக்கு பிடித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஒடுக்கப்பட்ட மக்க ளுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, நசுக்கப்படுகின்ற மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி.  எந்த தேர்தல் காலத்திலும் கூட்டணி கட்சி களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறப்பாக பணி ஆற்றுவர். எனவே, 24-ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சம்சாத் பேகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்’’.  இவ்வாறு அவர் பேசினார்.  பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி, திமுக கட்சி நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.