districts

img

அரசுப் பள்ளிகளுக்கு டெஸ்க்-பெஞ்ச் வழங்கும் விழா

அறந்தாங்கி, செப்.2 - புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த மூன்று  அரசு பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்ச் வழங்கும் விழா நடைபெற்றது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆணைப்படி அரசுப் பள்ளிகளில் தரையில் அமர்ந்து படிக்கும் மாண வர்களின் வசதிக்காகவும், அவர்கள் சிறப்பாக கல்வி கற்கவும் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து அரசு பள்ளி களுக்கு டெஸ்க், பெஞ்ச் வழங்க உத்தரவிட்டிருந்தார்.   இதனைத் தொடர்ந்து மண மேல்குடி ஒன்றியங்களைச் சேர்ந்த 9  அரசு பள்ளிகளுக்கும், ரூ. 25 லட்சம்  செலவில் டெஸ்க், பெஞ்ச் வழங்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக, கட்டுமாவடி ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி, கிருஷ்ணாஜிப் பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மேலஸ்தானம் அரசு நடுநிலைப் பள்ளி ஆகிய மூன்று அரசுப் பள்ளி களுக்கு டெஸ்க் - பெஞ்ச் வழங்கும் விழா  நடைபெற்றது.  கட்டுமாவடி அரசு தொடக்கப் பள்ளி யில் நடைபெற்ற இவ்விழாவில், 125 மாணவர்கள் பயன்பெறும் வகையில் டெஸ்க்-பெஞ்ச் வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் நஜிமுதீன் நலத் திட்ட உதவிகளை வழங்கி, குறைகளை கேட்டறிந்தார். இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர், மாணவர்களின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள்  கலந்து கொண்டனர்.