அறந்தாங்கி, மே 9 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காடு ரயில்வே, பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருபவர் சுப்பிரமணி யன்(82). இவரது மனைவி ருக்கு (75), மகன் அமிர்தலிங்கம் (35) ஆகியோர் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள். இந்நிலையில் திங்களன்று அமிர்தலிங்கம் வேலைக்கு சென்றுவிட்டார். ருக்கு ரேசன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது, இவர்களது கூரை வீடு மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அனைக்க முயற்சித்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த முக்கிய பொருட்களை எடுக்க சுப்பிரமணியன் வீட்டினுள் நுழைந்தார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும் கூரை வீடு முழுவதும் எரித்து சாம்பலானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர்மன்ற உறுப்பினர் சிவகிருபாகரன், வரு வாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் கள் எரிந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்த னர். காவல்துறையினர் வழக்கு பதிந்து விசா ரித்து வருகின்றனர். தீக்காயம் அடைந்த சுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். கூலி வேலை பார்க்கும் இவர்களுக்கு, அரசு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் முத்து சிவ கிருபாகரன் கோரிக்கை வைத்துள்ளார்.