புதுக்கோட்டை, பிப்.18 - மின் ஊழியர் அமைப்பின் கோட்டத் தலைவரும், சிஐடியு மாவட்ட துணைத் தலை வரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருமயம் ஒன்றியக் குழு உறுப்பினரு மான புதுக்கோட்டை மாவட் டத்தைச் சேர்ந்த தோழர் கு. செல்வராஜ் புதன்கிழமை மார டைப்பால் காலமானார். தோழரின் மறைவுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத் துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், திமுக ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம், விதொச மாநில பொருளாளர் எஸ். சங்கர், சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் கே.முக மதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் சி. அன்புமணவாளன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.சண்முகம், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.சண் முகம், எம்.ஆர்சுப்பையா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி, எஸ்.பாண்டிச்சேரி உள்ளிட்ட ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர். தோழர் செல்வ ராஜுக்கு சாரதா என்ற மனைவி மற்றும் 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.