புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி உள்ளாட்சி துறை துப்புரவுத் தொழிலாளர்கள் சார்பாக மறைந்த தோழர் ப.சண்முகம் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவரும், உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்க மாவட்ட தலைவருமான முகமதலிஜின்னா தலைமையில், சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராஜ், நகர செயலாளர் கணேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலாளர் கவிபாலா மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.