districts

img

குழந்தைகளை புத்தகம் வாசிக்க பழக்க வேண்டும்: ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை, நவ.30- புதுக்கோட்டை வாசகர் பேரவையும், திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியும் இணைந்து புதனன்று  நடத்திய குழந்தைக் கவிஞர் அழ.வள்ளி யப்பா நூற்றாண்டு விழாவில் அவரது  படத்தைத் திறந்து வைத்து, வள்ளியப்பா வின் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து,  நூற்றாண்டு விழா மலர் வெளியிடப் பட்டது.  விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேசுகையில், ‘‘அழ.வள்ளியப்பா அளவுக்கு குழந்தைகள் மன தில் இடம்பிடித்தவர் யாருமில்லை. அவ ருடைய பாடல்கள் சமூகத்துக்கு பயன்படக்  கூடிய கருத்துகளைக் கொண்டதாக இருந்  தது. இன்று குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. குழந்தை இலக்கியத்தையும் அதன் படைப்பாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை புத்தகம் வாசிக்கப் பழக்க  வேண்டும். அப்போதுதான் அவர்கள் தலை சிறந்த சான்றோர்களாக உருவாக முடி யும்’’ என்றார். விழாவிற்கு கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார்.வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். மருத்துவர் எஸ்.ராம்தாஸ், அரசு வழக்குரைஞர் செந்தில்குமார், கவிஞர்கள் சோலச்சி, பீர்முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். வள்ளியப்பாவின் மகளும் பால சாகித்ய புரஷ்கார் விருது பெற்றவரு மான தேவி நாச்சியப்பன் ஏற்புரை வழங்கி னார்.