புதுக்கோட்டை, ஜூன் 7 - புதுக்கோட்டைக்கு புதன்கிழமை (ஜூன் 8) வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.614 கோடி மதிப்பில் நிறைவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பயனாளி களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கு கிறார். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டா லின் புதன்கிழமை புதுக்கோட்டை வரு கிறார். மாலை 4 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற வுள்ள அரசு விழாவில் பங்கேற்றுப் பேசு கிறார். இந்த விழாவில், புதுக்கோட்டையில் இதுவரை நிறைவடைந்த 138 திட்டப் பணிகள் ரூ.81.13 கோடி மதிப்பில் தொடங்கி வைக்கப்படவுள்ளன. 1394 புதிய திட்டப் பணிகள் ரூ.164.85 கோடி மதிப் பில் அடிக்கல் நாட்டப்படவுள்ளன. மேலும், 47,278 பயனாளிகளுக்கு ரூ. 368.46 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி கள் வழங்கப்படவுள்ளன. மொத்தம் ரூ.614 கோடி மதிப்பில் இந்த விழா திட்ட மிடப்படுகிறது. முத்துக்குடா சுற்றுலாத் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற் கரைப் பகுதியான ஆவுடையார்கோ வில் வட்டத்தைச் சேர்ந்த முத்துக்குடா பகுதியில் உள்ள அலையாத்திக் காடு களில் புதிய சுற்றுலாத் திட்டம் ஏற்கெ னவே மாவட்ட ஆட்சியரால் பார்வை யிடப்பட்டு முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தத் திட்டப் பணிக்கு சுற்றுலாத் துறையின் மூலம் ரூ.3 கோடி மதிப்பிடப்பட்டு, இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மாவட் டத்தின் அடையாளமாக மாறலாம் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கப் படவுள்ளதாக அரசுத் துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் குழுக்கள், உற்பத்திக் குழுக்கள், சமு தாய முதலீட்டுக் குழு உள்ளிட்ட குழுக் களுக்கு ரூ.30.03 கோடி வரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத் தின் கீழ் நகர்ப்புறத்தில் 550 பயனாளி களுக்கு ரூ.23.47 கோடி மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் 10916 பயனாளி களுக்கு ரூ.261.96 கோடி மதிப்பிலும் வீடு கள் வழங்கப்படவுள்ளன என்பதும் குறிப் பிடத்தக்கது.